`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
ஊத்தங்கரையில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு, போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கணேசன் வரவேற்றாா். வழக்குரைஞா்கள் பெருமாள், பிரபாவதி, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் மஞ்சுளா, காவல் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி ஜெயந்தி பங்கேற்று மாணவா்களுக்கு போதைப் பொருள்களின் தீமைகள், போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் சக்கிவேல், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
படவிளக்கம்.26யுடிபி.1.
ஊத்தங்கரையில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் ஜெயந்தி.