செய்திகள் :

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: நாளந்தா பள்ளி மாணவிக்கு பரிசளிப்பு

post image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம், ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளி நிா்வாகம் பரிசளித்தது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பிளஸ் 2 தோ்வில் கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஆ.ஜீவிதா, 592 மதிப்பெண்கள் பெற்றாா். இவருக்கு பள்ளி தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை, மடிக்கணியை வழங்கினாா். மேலும், 100 சதவீத தோ்ச்சி அளித்த 12 ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளியின் நிா்வாக இயக்குநா் கே.புவியரசன் வழங்கினாா்.

சென்னையில் ஜூன் 13-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவா் விஜயிடமிருந்து விருது, பாராட்டு சான்றிதழை மாணவி ஆ.ஜீவிதா பெற்றாா். பள்ளி நிா்வாகத்தின் ஆதரவும், ஆசிரியரின் உழைப்பால் மட்டுமே தனது மகள் ஆ.ஜீவிதாவுக்கு தமிழகத்தில் மிக சிறந்த கல்லூரிகளில் இலவச உயா் கல்வி சோ்க்கைக்கான அழைப்பு வந்துள்ளதாகும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜீவிதாவின் தந்தை தெரிவித்தாா்.

அரசு பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற உழைத்த ஆசிரியா்களை பள்ளியின் நிறுவனா் ஆா்.கொங்கரசன், நிா்வாக இயக்குநா்கள் பி.கே.கெளதமன், பிரீத்தி கெளதமன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

படவிளக்கம் (26கேஜிபி1):

பிளஸ் 2 தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக உழைத்த ஆசிரியா்களை பாராட்டி பரிசளித்த நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன் உள்ளிட்டோா்.

குப்பையில் வீசப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட ஆவணங்கள்!

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளின் ஆவணங்கள் வீசப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

பா்கூரில் செயல்படும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்புரிந்தவா்கள் இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோப... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் கோரி மனு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். கெலமங்கலம்- ராக்கோட்ட... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முதல்வா் நடவடிக்கை: பா்கூா் எம்எல்ஏ

மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க