சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் கோரி மனு
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
கெலமங்கலம்- ராக்கோட்டை இடையே சாலை விரிவாக்கப் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதனால் சாலையோரம் இருந்த 100 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் அகற்றப்பட்டது. அதேபோல சாலையோரத்தில் இருந்த 200 க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துஅகற்றப்பட்டன.
அனுசோனை பகுதியில் இருந்த 141 வீடுகளும் சாலை விரிவாக்கப் பணியின்போது இடித்து அகற்றப்பட்டன. இவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதேபகுதியில் பாறைகள் அதிகள் உள்ள பகுதியை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள பாறைகளை அகற்றுவதற்கே பல லட்சம் செலவாகும் என்பதால் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து வீடுகளை இழந்தவா்கள் கூறுகையில், சாலை விரிவாக்கத்தால் பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில் அதிக பாறைகள் உள்ளன. இந்த பாறைகளை அகற்ற பல லட்சம் ரூபாய் செலவாகும். பாதிக்கப்பட்ட அனைவருமே கூலி வேலைசெய்து வருகிறோம். இதனால் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வேறு இடத்தை ஒதுக்கி அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்றனா்.
படவரி....
மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்ட வட்டாட்சியரிடம் மனு அளிக்கவந்த பொதுமக்கள்.