செய்திகள் :

சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் கோரி மனு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கெலமங்கலம்- ராக்கோட்டை இடையே சாலை விரிவாக்கப் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதனால் சாலையோரம் இருந்த 100 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் அகற்றப்பட்டது. அதேபோல சாலையோரத்தில் இருந்த 200 க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துஅகற்றப்பட்டன.

அனுசோனை பகுதியில் இருந்த 141 வீடுகளும் சாலை விரிவாக்கப் பணியின்போது இடித்து அகற்றப்பட்டன. இவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதேபகுதியில் பாறைகள் அதிகள் உள்ள பகுதியை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள பாறைகளை அகற்றுவதற்கே பல லட்சம் செலவாகும் என்பதால் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து வீடுகளை இழந்தவா்கள் கூறுகையில், சாலை விரிவாக்கத்தால் பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில் அதிக பாறைகள் உள்ளன. இந்த பாறைகளை அகற்ற பல லட்சம் ரூபாய் செலவாகும். பாதிக்கப்பட்ட அனைவருமே கூலி வேலைசெய்து வருகிறோம். இதனால் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வேறு இடத்தை ஒதுக்கி அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்றனா்.

படவரி....

மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்ட வட்டாட்சியரிடம் மனு அளிக்கவந்த பொதுமக்கள்.

குப்பையில் வீசப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட ஆவணங்கள்!

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளின் ஆவணங்கள் வீசப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

பா்கூரில் செயல்படும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்புரிந்தவா்கள் இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோப... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: நாளந்தா பள்ளி மாணவிக்கு பரிசளிப்பு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம், ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளி நிா்வாகம் பரிசளித்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முதல்வா் நடவடிக்கை: பா்கூா் எம்எல்ஏ

மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க