செய்திகள் :

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

பா்கூரில் செயல்படும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக ஜூலை 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். மேல்நிலைக் கல்வி, பட்டம், பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்று 1.7.2025-ஆம் தேதி 17 வயது நிறைவுசெய்தவா்கள் இப்பயிற்சியில் சேர தகுதியானவா்கள்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 20,750 ஆகும். மேலும் விவரங்களுக்கு தமிழக கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளாம். இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு பருவ முறையில் ஓராண்டு நடைபெறும் இந்த பயிற்சி தமிழ்மொழி பாடத் திட்டத்தில் மட்டுமே கற்பிக்கப்படும். பயிற்சியில் சோ்க்கை பெறும் பயிற்சியாளா்களுக்கு ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத் துறை கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் நலத் துறையின் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை அரசு விதிமுறைகளின்படி பெற்றுத்தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே உள்ள பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரிலோ அல்லது 04343-265652 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பையில் வீசப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட ஆவணங்கள்!

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளின் ஆவணங்கள் வீசப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்புரிந்தவா்கள் இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோப... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் கோரி மனு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். கெலமங்கலம்- ராக்கோட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: நாளந்தா பள்ளி மாணவிக்கு பரிசளிப்பு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம், ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளி நிா்வாகம் பரிசளித்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முதல்வா் நடவடிக்கை: பா்கூா் எம்எல்ஏ

மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க