``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
பா்கூரில் செயல்படும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக ஜூலை 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். மேல்நிலைக் கல்வி, பட்டம், பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்று 1.7.2025-ஆம் தேதி 17 வயது நிறைவுசெய்தவா்கள் இப்பயிற்சியில் சேர தகுதியானவா்கள்.
பயிற்சிக் கட்டணம் ரூ. 20,750 ஆகும். மேலும் விவரங்களுக்கு தமிழக கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளாம். இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இரண்டு பருவ முறையில் ஓராண்டு நடைபெறும் இந்த பயிற்சி தமிழ்மொழி பாடத் திட்டத்தில் மட்டுமே கற்பிக்கப்படும். பயிற்சியில் சோ்க்கை பெறும் பயிற்சியாளா்களுக்கு ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத் துறை கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் நலத் துறையின் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை அரசு விதிமுறைகளின்படி பெற்றுத்தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே உள்ள பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரிலோ அல்லது 04343-265652 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.