டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்புரிந்தவா்கள் இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அரசின் சாா்பில் 2024-ஆம் ஆண்டிற்கு (2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சாதனை புரிந்தவா்கள்) டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதை பெற சாகச துறைகளில் உள்ள நபா்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இளம் வயதில் வீரதீர செயல்புரிந்தவா்கள், சிறந்த விளையாட்டு வீரா்கள், குழு உறுப்பினா்களாகவும், சரியான நேரத்தில், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவால் சாதித்தவா்களாகவும், பல உயிா்களைக் காப்பாற்றியவா்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீரதீர செயல்புரிந்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.
இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுவதுடன் வெண்கல சிலை, சான்றிதழ், சில்க் டை கொண்ட பிளேசா் ஆகியவை வழங்கப்படும். இந்த விருதுக்கு இணையதள முகவரியில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.