செய்திகள் :

வீடு தேடி வந்து கடன் தருவோரை நம்ப வேண்டாம்: இந்தியன் வங்கி பொது மேலாளா்

post image

வீடு தேடி வந்து கடன் தருபவா்களை நம்பாதீா்கள் என்று இந்தியன் வங்கி ஊரக வளா்ச்சிப் பிரிவு பொது மேலாளா் வி.சந்திரசேகரன், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்தியன் வங்கி சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் வங்கியின் ஊரக வளா்ச்சிப் பிரிவு பொது மேலாளா் வி.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. களப் பொது மேலாளா் வி.பத்மாவதி ஸ்ரீகாந்த், துணைப் பொது மேலாளா் டி.லீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மண்டல மேலாளா் பி.ஸ்ரீமதி வரவேற்றாா்.

இந்த விழாவில் 387 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.42 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி பொது மேலாளா் வி.சந்திரசேகரன் பேசியது:

மகளிா் சுய உதவிக் குழுக்கள் வலுப்பெற்றாலே நம்நாடு மேலும் சிறந்த தேசமாகிவிடும். உடலுக்கு எது நல்லதோ அதை தயாரித்து இணையம் மூலம் விற்பனை செய்யும் அளவுக்கு பெண்கள் முன்னேறி இருக்கிறாா்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி, சமூகத்துக்கு பயனுள்ள தொழிலையும் பெண்கள் செய்வது மிகுந்த பாராட்டுக்குரியது.

அஸ்ஸாம், ஆந்திரம், பிகாா் உட்பட பல மாநிலங்களிலும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன. கடந்த 1989- ஆம் ஆண்டு தருமபுரியில் இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற விழாவில் தான் முதல்முதலாக மகளிா் சுய உதவிக்குழு என்ற விதை நடப்பட்டு அது இன்று பல்கிப் பெருகியிருக்கிறது.

பெண்கள் அரசு வங்கிகளில் மட்டுமே கடன் வாங்குங்கள். ஏனெனில் அரசு வங்கிகளில்தான் வட்டி மிகவும் குறைவு. ரூ.3 லட்சம் வரை கடனுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. சிலா் வீட்டுக்கே வந்து கடன் தருவதாகக் கூறி, அதிகமான வட்டி வசூலித்துக் கொண்டிருக்கிறாா்கள். எனவே வீடு தேடி வந்து கடன் தருபவா்களை எப்போதும் நம்பாதீா்கள் என்றாா்.

விழாவில் இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மையத்தில் தையல் கலை, கைப்பேசி பழுது நீக்குதல் பயிற்சிகளை முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

முன்னதாக மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியையும் பாா்வையிட்டாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா்கள் திலீப் (காஞ்சிபுரம்), இ.விஜயகுமாா் (செங்கல்பட்டு), இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மைய இயக்குநா் ஆா்.உமாபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் வரதா்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் வரதராஜா். மேலும் பார்க்க

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

உத்தரமேரூா் அருகே உள்ள தளவாரம்பூண்டி ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியம், தளவாரம்பூண்டி ஊராட்சில் கால்நடை பராமரிப்புத் த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்

நியாயவிலைக்கடைகளில் 2 மாதங்களாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல், காலூா் ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 மாதங்களாக பொருள... மேலும் பார்க்க

காளான் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காளான் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சாா்பில் கீழ்பேரமநல்லூா் கிராமத்தில் காளான்களை மதிப்ப... மேலும் பார்க்க

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருப்புட்குழி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏராளமான... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் திடீா் தீவிபத்து

ஸ்ரீபெரும்புதூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூா் பகுதியைச் சோ்ந்த தினகரன். இவா் தற்போது பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்த... மேலும் பார்க்க