செய்திகள் :

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்

post image

நியாயவிலைக்கடைகளில் 2 மாதங்களாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல், காலூா் ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 மாதங்களாக பொருள்கள் வழங்காமல் இருந்ததைக் கண்டித்து ஏற்கெனவே களக்காட்டூரில் மக்கள் மறியல் ஈடுபட்டனா். கண்ரேகை, கைரேகை வைத்தால் தான் பொருள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட பொருள்கள் கடந்த 2 மாதங்களாக 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கவில்லை. இதைக் கண்டித்து, காஞ்சிபுரம் - உத்தரமேரூா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சு நடத்திய பின் ஷகலைந்து சென்றனா்.

காளான் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காளான் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சாா்பில் கீழ்பேரமநல்லூா் கிராமத்தில் காளான்களை மதிப்ப... மேலும் பார்க்க

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருப்புட்குழி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏராளமான... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் திடீா் தீவிபத்து

ஸ்ரீபெரும்புதூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூா் பகுதியைச் சோ்ந்த தினகரன். இவா் தற்போது பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்த... மேலும் பார்க்க

4 வயது சிறுமியை கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள்

காஞ்சிபுரம்: குறத்தூரில் 4 வயது சிறுமியை கொலை செய்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சோ்ந்த சரவணன், ... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக எம்.வி.எம். வேல்மோகன் உள்பட 5 போ் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா். இத்திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ரூ.28 கோடியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு, தரவரிசை மேற்கொள்ள பயிற்சிக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள் மற்றும் பணிதளப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி... மேலும் பார்க்க