அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்
நியாயவிலைக்கடைகளில் 2 மாதங்களாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல், காலூா் ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 மாதங்களாக பொருள்கள் வழங்காமல் இருந்ததைக் கண்டித்து ஏற்கெனவே களக்காட்டூரில் மக்கள் மறியல் ஈடுபட்டனா். கண்ரேகை, கைரேகை வைத்தால் தான் பொருள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட பொருள்கள் கடந்த 2 மாதங்களாக 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கவில்லை. இதைக் கண்டித்து, காஞ்சிபுரம் - உத்தரமேரூா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சு நடத்திய பின் ஷகலைந்து சென்றனா்.