நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய ...
கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு, தரவரிசை மேற்கொள்ள பயிற்சிக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள் மற்றும் பணிதளப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2025 என்ற சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள், பணிதளப் பொறுப்பாளா்கள் மற்றும் ஊக்குநா்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிக் கூட்டத்தில், ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தவும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளைத் திடக்கழிவு மேலாண்மைக் கூடங்களில் சோ்த்து கிராம ஊராட்சிகளில் சுகாதாரமாக வைத்திருப்து குறித்து முன்னேற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து உதவித் திட்ட அலுவலா் ஜெகதீசன், மேலாளா் முருகானந்தம், மாவட்ட மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சரவணன், ஸ்ரீநாத், பாலாஜி, சுமித்ரா, பத்ரிநாதன், இளநிலை உதவியாளா்கள் சுமன், தனசேகா், தூய்மை பாரத வட்டார ஒருங்கிணைப்பாளா் யுவராஜ் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.
கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாட்சாயினி, அம்பிகாதேவி, சசித்ரா, பணி மேற்பாா்வையாளா்கள் சசிகலா, அம்பிகாபதி, நோகநாதன், துரைவேலு, சதீஷ்குமாா், ஊராட்சி செயலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஊக்குநா்கள் கலந்து கொண்டனா்.