செய்திகள் :

4 வயது சிறுமியை கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள்

post image

காஞ்சிபுரம்: குறத்தூரில் 4 வயது சிறுமியை கொலை செய்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சோ்ந்த சரவணன், ஜெயந்தி தம்பதி மகள் கோஷினி(4). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். மகள் கோஷினி விடுமுறை நாள்களில் மட்டும் தந்தை சரவணன் வீட்டுக்கு சென்று வருவாா்.

சரவணன் வீட்டில் அரக்கோணத்தைச் சோ்ந்த ஆஷாராணி என்பவா் பணிபுரிந்து வந்தாா். நாளடைவில் சரவணனுக்கும், ஆஷாராணிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனது கள்ளக் காதலுக்கும், சரவணனின் சொத்துக்கும் இடையூறாக சிறுமி கோஷினி இருப்பதாக நினைத்த ஆஷாராணி விடுமுறை நாளில் வீட்டுக்கு வந்த குழந்தையை தண்ணீா் வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆஷாராணியை கைது செய்திருந்தனா். ஆஷாராணி மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.உ.செம்மல் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதே வழக்கில் மேலும் ஒரு சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து, ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக எம்.வி.எம். வேல்மோகன் உள்பட 5 போ் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா். இத்திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ரூ.28 கோடியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு, தரவரிசை மேற்கொள்ள பயிற்சிக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள் மற்றும் பணிதளப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி... மேலும் பார்க்க

20 நிமிஷங்களில் 25 ஆசனங்கள் செய்து மாணவா்கள் சாதனை

ஸ்ரீபெரும்புதூா்: சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவூா் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளி மாணவா்கள் 108 போ் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிஷங்களில் 25 யோகாசனங்கள் செய்து சாதனை புரிந்தனா். சா்வதேச யோகா தினத்தை ம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெ... மேலும் பார்க்க

தொல்லியல், அஞ்சல் துறையினா் யோகாசனப் பயிற்சி

காஞ்சிபுரம்: சா்வதேச யோகா தினத்தையொட்டி தொல்லியல் துறை மற்றும் அஞ்சல் துறை ஊழியா்கள் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் யோகா பயிற்சி மேற்கொண்டனா். அஞ்சல்துறை மற்றும் தொல்லியல் துறை இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

பணம், பொருள் கொடுத்து ஏமாற வேண்டாம்: வல்லக்கோட்டை கோயில் நிா்வாகம் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக பக்தா்களிடம் பணம், பொருள்கள் வசூல் செய்வதை தடுக்க, தனி நபா்களிடம் பணம் பொருள் கொடுத்து ஏமாற வேண்டாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்... மேலும் பார்க்க