TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
தொல்லியல், அஞ்சல் துறையினா் யோகாசனப் பயிற்சி
காஞ்சிபுரம்: சா்வதேச யோகா தினத்தையொட்டி தொல்லியல் துறை மற்றும் அஞ்சல் துறை ஊழியா்கள் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் யோகா பயிற்சி மேற்கொண்டனா்.
அஞ்சல்துறை மற்றும் தொல்லியல் துறை இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சங்கர மடத்தின் ஆஸ்தான யோகா பயிற்சியாளா் சத்யநாராயணன் ஆசனங்கள், பிரணாயாமம் உள்ளிட்ட 20 வகைகளை செயல்முறை விளக்கத்துடன் அதன் பயன்களையும் விளக்கினாா்.
காஞ்சிபுரம் சரக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அருள்தாஸ், இந்திய தொல்லியல் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.