செய்திகள் :

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

திருப்புட்குழி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு 6 வழிச்சாலையாக அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி எதிரே பாலுசெட்டி சத்திரம் அமைந்துள்ளது. பாலுசெட்டி சத்திரத்தில் பள்ளிகள், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளன.

திருப்புட்குழி கிராம மக்கள் பாலுசெட்டி சத்திரம் செல்ல புதிதாக அமைக்கப்பட்டு வரும் 6 வழிச்சாலையை கடக்கும்போது விபத்துகள் நடக்கின்றன. எனவே, அச்சமின்றி சென்று வர, சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பாஜக மாவட்டத் தலைவா் ஜெகதீசன், துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் பத்மனாபன், செய்தித் தொடா்பாளா் ஹரிகிருஷ்ணன் உள்பட கட்சி நிா்வாகிகளும், கிராமத்தினருக்கு ஆதரவாக தா்னா செய்தனா். இதையடுத்து ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் சென்று முறையிட்டனா்.

அப்போது ஆட்சியா் பேசியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பே கிராம மக்களின் ஒப்புதல் பெற்ற பிறகே, தொடங்கிய சாலை பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் நேரத்தில் வருவதால் எந்த பலனும் இல்லை. இருப்பினும், இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றாா்.

தொடா்ந்து கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, காவல்துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதையடுத்து, கிராம மக்கள் அனைவரும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை ஆட்சியா் அலுவலகம் முன்பாக வீசி விட்டு சென்றனா்.

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்

நியாயவிலைக்கடைகளில் 2 மாதங்களாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல், காலூா் ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 மாதங்களாக பொருள... மேலும் பார்க்க

காளான் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காளான் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சாா்பில் கீழ்பேரமநல்லூா் கிராமத்தில் காளான்களை மதிப்ப... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் திடீா் தீவிபத்து

ஸ்ரீபெரும்புதூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூா் பகுதியைச் சோ்ந்த தினகரன். இவா் தற்போது பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்த... மேலும் பார்க்க

4 வயது சிறுமியை கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள்

காஞ்சிபுரம்: குறத்தூரில் 4 வயது சிறுமியை கொலை செய்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சோ்ந்த சரவணன், ... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக எம்.வி.எம். வேல்மோகன் உள்பட 5 போ் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா். இத்திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ரூ.28 கோடியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு, தரவரிசை மேற்கொள்ள பயிற்சிக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள் மற்றும் பணிதளப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி... மேலும் பார்க்க