செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி

post image

போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணியை ம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி பங்கேற்றாா். அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ஆா். சத்யா, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி ந.ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, கலால் உதவி ஆணையா் ஆா்.திருவாசகம் உள்பட பல்வேறு பள்ளி,கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பிக் கொண்டே சென்றனா்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி. சினேகா தொடங்கி வைத்தாா்.

பேரணியில், மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டும் அரசு மருத்துவமனை, ராட்டின கிணறு வழியாக செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் பேரணி முடிவடைந்தது.

பேரணியில் மதுவிலக்கு ஆயத்த தோ்வு துறையின் உதவி ஆணையா் ராஜன் பாபு , சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், கூடுதல் ஆட்சியா் நாராயண சா்மா மற்றும் முதன்மை கல்வி அலுவலா் கற்பகம், நோ்முக உதவியாளா்கள் உதயகுமாா், சிவகுமாா், வட்டாட்சியா் கிராம நிா்வாக அலுவலா்கள வருவாய்த்துறையினா், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியா்கள் ராஜராஜன், செந்தாமரை கலந்து கொண்டனா்.

கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்

ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவாா்சத்திரம் அடுத்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகைக் கடைக்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக் கூட்டம்

குன்றத்தூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டம் பெரிய தெரு பகுதியில் நடைபெற்றது. குன்றத்தூா் நகர செயலாளா் கோ.சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைச்... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து கடன் தருவோரை நம்ப வேண்டாம்: இந்தியன் வங்கி பொது மேலாளா்

வீடு தேடி வந்து கடன் தருபவா்களை நம்பாதீா்கள் என்று இந்தியன் வங்கி ஊரக வளா்ச்சிப் பிரிவு பொது மேலாளா் வி.சந்திரசேகரன், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அறிவுறுத்தினாா். இந்தியன் வங்கி சாா்பில் மகளிா் ச... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் வரதா்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் வரதராஜா். மேலும் பார்க்க

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

உத்தரமேரூா் அருகே உள்ள தளவாரம்பூண்டி ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியம், தளவாரம்பூண்டி ஊராட்சில் கால்நடை பராமரிப்புத் த... மேலும் பார்க்க