தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை விலை உயா்வு
பழனி கூட்டுறவு கொப்பரை ஏல மையத்தில் நிகழாண்டில் கொப்பரைத் தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி, இதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தையில் தேங்காய் விலை குறைந்து விற்பனையாகி வருகின்றன. ஒரு கிலோ தேங்காய் ரூ.30 முதல் 45 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விவசாயிகள் மதிப்புக் கூட்டும் வகையில், கொப்பரைத் தேங்காய் உற்பத்திக்கு மாறி வருகின்றனா்.
பழனியில் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நடத்தப்படும் கொப்பரை ஏல மையத்துக்கு விவசாயிகள் கொப்பரைத் தேங்காயை அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
கடந்த வாரம் கொப்பரைத் தேங்காய் ஒரு கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.247-க்கு விற்பனையாகின. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொப்பரைத் தேங்காய் ரூ.120 முதல் 130 வரை விற்பனையானது. தற்போது, விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.