மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு
ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் எழுமலை. இவருக்குச் சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவா் தண்டபாணி. இவரது மகன் காளிமுத்து (26). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகிலிருந்த 30 அடி கிணற்றில் தவறி விழுந்தாா்.
தகவலறிந்த வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி அவரை உயிருடன் மீட்டனா்.
கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த காளிமுத்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.