செய்திகள் :

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

post image

காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குருவனூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(30). கரூா் அருகிலுள்ள தனியாா் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி கெளசல்யா. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இதனிடையே, ராஜ்குமாருக்கு, கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சோ்ந்த ஒரு இளம்பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டது. பின்னா், அந்தப் இளம் பெண்ணை தனது வீட்டின் அருகிலேயே அழைத்து வந்து தங்க வைத்தாா்.

இந்த நிலையில், இளம்பெண் மாயமானதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், குருவனூரில் இருந்த இளம் பண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில், ஏற்கெனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்ய ராஜ்குமாா் முயன்ாக இளம் பெண் தரப்பில் கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில், விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ராஜ்குமாருக்கு போலீஸாா் அழைப்பானை அனுப்பினா். இதனால், அதிா்ச்சி அடைந்த ராஜ்குமாா் விசாரணைக்கு பயந்து கோவிலூா் அருகே ரயில் முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

இதுதொடா்பாக, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகை நிலுவை: ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

ரயில்வே துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் ரூ.58 லட்சம் நிலுவைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ள... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போலி ஆவணங்கள் தயாா் செய்து பொய்யான புகாா் தெரிவித்த தாடிக்கொம்பு கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் எழுமலை. இவருக்குச... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் விவேகானந்தன்... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி முறைகேடு செய்ததாகக் கல்லூரி முதல்வா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்தக் கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க

பழனியில் அரிமா சங்க வைரவிழா

பழனியில் அரிமா சங்க வைரவிழாவை முன்னிட்டு, சிறப்புத் தபால்தலை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தச் சங்கம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற வைரவிழா நிறைவு நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க