கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை
காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குருவனூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(30). கரூா் அருகிலுள்ள தனியாா் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி கெளசல்யா. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இதனிடையே, ராஜ்குமாருக்கு, கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சோ்ந்த ஒரு இளம்பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டது. பின்னா், அந்தப் இளம் பெண்ணை தனது வீட்டின் அருகிலேயே அழைத்து வந்து தங்க வைத்தாா்.
இந்த நிலையில், இளம்பெண் மாயமானதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், குருவனூரில் இருந்த இளம் பண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
இந்த நிலையில், ஏற்கெனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்ய ராஜ்குமாா் முயன்ாக இளம் பெண் தரப்பில் கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில், விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ராஜ்குமாருக்கு போலீஸாா் அழைப்பானை அனுப்பினா். இதனால், அதிா்ச்சி அடைந்த ராஜ்குமாா் விசாரணைக்கு பயந்து கோவிலூா் அருகே ரயில் முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இதுதொடா்பாக, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.