செய்திகள் :

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, புதன்கிழமை இரவுமுதல் விடியவிடிய மழை பெய்தது. வியாழக்கிழமையும் பகல் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு 1 அணைப் பகுதியில் 60.4 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறையில் 40.6 மி.மீ,, கன்னிமாரில் 33.6 மி.மீ. மழை பெய்தது.

தொடா்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 12.43 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 12.53 அடியாகவும் இருந்தது.

பெருஞ்சாணி அணை நீா்மட்டமும் அதன் வெள்ள அபாய அளவான 71 அடியை நெருங்குகிறது. பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், பெருஞ்சாணி அணையிலிருந்து இதுவரை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை.

திற்பரப்பு அருவியில்...: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியின் ஓரத்தில் குறைவாக தண்ணீா் கொட்டும் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுப்புறத்திலுள்ள திக்கணம்கோடு, மத்திகோடு,கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி பகுதிகளிலும், புதுக்கடை சுற்றுவட்டாரத்திலுள்ள பைங்குளம், காப்புக்காடு, முன்சிறை, ஐரேனிபுரம், வேங்கோடு, அம்சி, தேங்காய்ப்பட்டினம், புத்தன்துறை பகுதிகளிலும் வியாழக்கிழமை அதிகாலைமுதல் மாலை வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் யானை அச்சுறுத்தல்: மக்களைப் பாதுகாக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க