Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை மேயா் பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், உதவி ஆணையா் பாலசுந்தரம், உதவி பொறியாளா் ராஜசீலி, சுஜின், இளநிலை பொறியாளா் ராஜா, சுகாதார அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், முருகன், ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.