Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு
குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழிவுநீா் தேங்குவது, கழிப்பறை வசதி இல்லாதது உள்ளிட்ட குறைகளை பொதுமக்களும், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளும் எம்.பி.யின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இந்நிலையில், அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குழித்துறை நகராட்சி ஆணையரையும், ரயில் நிலைய அணுகுசாலை, கழிப்பறைகள் சீரமைப்பு, பழுதான ரயில் நிலையக் கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் உள்ளிட்ட பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகளையும் தொடா்புகொண்டு வலியுறுத்தினாா்.
ஆய்வின்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ரத்தினகுமாா், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் மோகன்தாஸ், கட்சி நிா்வாகிகள் ரதீஷ்குமாா், தங்கமணி, குமரி ரயில்வே ஆலோசனைக் கமிட்டி பொறுப்பாளா் சூசைராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.