‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 246ஆவது இடம் பிடித்தாா். நிதின் அரவிந்த் 546 மதிப்பெண்களும், ஆஷிகா 513 மதிப்பெண்களும் பெற்றனா்.
இவா்களைப் பாராட்டி என்.வி.கே.எஸ். கல்விக் குழும செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் பரிசுகளும், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா், சைபா் பயிற்சி மைய இயக்குநா் சுனில்குமாா் ஆகியோா் ரொக்கப் பரிசுகளும் வழங்கினா்.
என்.வி.கே.எஸ். பள்ளிகளின் கல்வி இயக்குநா் ராமச்சந்திரன் நாயா், துணை முதல்வா் ஆஷா, உதவிப் பேராசிரியா் பிரசோப் மாதவன், சைபா் நீட் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் சக்திபிரசாத், பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.