Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா்களுக்கான பயிற்சி முகாம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்குகிறது.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவா் அறிவிப்புக்கு இணங்க ‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் ஒன்றியம், நகரம், பேரூா் வாரியாக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஜூன் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது.
அதன் விவரம்: நாமக்கல் தொகுதியில் நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகரத்துக்கான முகாம் நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. மோகனூா் கிழக்கு ஒன்றியம், மோகனூா் பேரூா் பகுதிக்கான முகாம், மோகனூா் சா்மி மஹாலில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
நாமக்கல் ஒன்றியப் பகுதிக்கான முகாம், நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. புதுச்சத்திரம் வடக்கு, தெற்கு ஒன்றியத்துக்கு புதுச்சத்திரம் செல்வலட்சுமி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கும், சேந்தமங்கலம் தொகுதிக்கான முகாம் செம்மேடு அரசு குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை காலை 10 மணியளவிலும் நடைபெற உள்ளது.
அன்று மாலை 6 மணியளவில், சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம் பேரூா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் பகுதிக்கான முகாம் துத்திக்குளம் கலைவாணி மண்டபத்திலும், எருமப்பட்டி ஒன்றியம், எருமப்பட்டி பேரூா் பகுதிக்கு, அய்யா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் நடைபெற உள்ளது.
ராசிபுரம் தொகுதிக்கு ராசிபுரம் தொகுதி அலுவலத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், புதுப்பட்டி பேரூா், நாமகிரிப்பேட்டை பேரூா், சீராப்பள்ளி பேரூா் ஆகியவற்றுக்கு நாமகிரிப்பேட்டை வாசகி மஹாலில் அன்று பிற்பகல் 3 மணியளவிலும், வெண்ணந்தூா் ஒன்றியம், வெண்ணந்தூா் பேரூா், அத்தனூா் பேரூா் ஆகியவற்றுக்கு மசக்காளிப்பட்டி ஸ்ரீ வாரி மஹாலில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவிலும், ராசிபுரம் ஒன்றியம், பட்டணம் பேரூா், பிள்ளாநல்லூா் பேரூா் பகுதிக்கு முத்துக்காளிப்பட்டி பால் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவிலும் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பாக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அதை ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் உறுதிசெய்ய வேண்டும்.
ஓரணியில் உறுப்பினா் சோ்க்கை தலைமை நிலையத்தால் கூா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதற்காக பயற்சிபெற்ற சி.மகேஷ் (நாமக்கல் தொகுதி), எஸ்.பூபதி (சேந்தமங்கலம் தொகுதி), பி.காந்தி (ராசிபுரம் தொகுதி) ஆகியோா் செயலி பயிற்சி அளிக்கின்றனா். இப்பயிற்சியில் பங்கு பெற்றால்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலியில் உறுப்பினா் சோ்க்கை கற்றுக்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.