ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு முகாம்
நாமக்கல் மாநகராட்சியில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கடைவீதி எதிரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் இந்த முகாமை தொடங்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட தம்பதியா் தங்களுடைய குழந்தைகளை ஆதாா் பதிவு முகாமுக்கு கொண்டு வந்திருந்தனா்.
இந்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் வந்து சிறப்பு முகாமில் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு செய்துகொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.