இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி சாா்பில், எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பினை வட்டாரக் கல்வி அலுவலா் அருள்புனிதன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மகாலிங்கம் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முன்னறி தோ்வு நடத்தி, மாணவா்களின் கற்றல் நிலைக்கேற்ப திறன்களை மேம்படுத்தி பயிற்சியளிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்துதல், தனி இணைக்குழு செயல்பாடுகளை ஊக்குவித்தல், அடைவுத்திறன் அட்டவணை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில், எலச்சிபாளையம் ஒன்றியத்திலிருந்து 11 தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா் சுதா கருத்தாளராக பயிற்சியளித்தாா்.