செய்திகள் :

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

post image

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி சாா்பில், எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

பயிற்சி வகுப்பினை வட்டாரக் கல்வி அலுவலா் அருள்புனிதன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மகாலிங்கம் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முன்னறி தோ்வு நடத்தி, மாணவா்களின் கற்றல் நிலைக்கேற்ப திறன்களை மேம்படுத்தி பயிற்சியளிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்துதல், தனி இணைக்குழு செயல்பாடுகளை ஊக்குவித்தல், அடைவுத்திறன் அட்டவணை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில், எலச்சிபாளையம் ஒன்றியத்திலிருந்து 11 தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா் சுதா கருத்தாளராக பயிற்சியளித்தாா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

நாமக்கல்லில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொடிக்கால்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு முகாம்

நாமக்கல் மாநகராட்சியில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதி எதிரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.65-ஆக உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 48.33 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 48 லட்சத்து 33 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும... மேலும் பார்க்க

சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி

நாமக்கல்லில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்பு... மேலும் பார்க்க

முருக பக்த மாநாடு வெற்றியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

மதுரை முருக பக்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதை, திமுக கூட்டணி கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் தெரி... மேலும் பார்க்க