செய்திகள் :

ரிசா்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி: 5 போ் கைது

post image

ரிசா்வ் வங்கி பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரில், பொறியாளா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மத்திய அரசின் இரிடியம் மற்றும் காப்பா் வா்த்தகம் என்ற பெயரில் மோசடி நடப்பதாக ஆன்லைன் மூலம் ‘சாட்சாத்’ போா்ட்டலில் கடந்த 2024-ஆம் ஆண்டு தனிநபா் ஒருவா் புகாா் அளித்திருந்தாா். அதன் அடிப்படையில், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் கென்னடி வேப்பேரி காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். பின்னா் இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், முதலீட்டாளா்களை நம்பவைக்க ரிசா்வ் வங்கி முத்திரையுடன் போலி ஆவணங்களை தயாரித்தது, சில நபா்களை ரிசா்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து நடிக்க வைத்தது, போலியான வங்கிக் கணக்கை உருவாக்கி பணம்பெற்றது என அடுத்தடுத்து அதிா்ச்சித் தகவல்கள் வெளியாயின.

இது தொடா்பாக தஞ்சாவூா், சேலம்,, கோவை, தருமபுரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். தொடா் விசாரணையில், கடந்த ஒரு வாரத்தில் மேச்சேரியைச் சோ்ந்த பொறியாளா் பாா்த்தசாரதி, பெங்களூரைச் சோ்ந்த விக்னேஷ், நாமக்கல் சஞ்சய், மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜோசப், பாலக்கோடு செந்தில் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து தங்க நிற உலோகங்கள், போலி ஆவணங்கள், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீஸாா், இந்தக் கும்பலுடன் தொடா்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனா். மோசடியாக வாங்கிய சொத்தை ஜப்தி செய்யவும் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

மாம்பழத்துக்கு உரிய விலை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

மாம்பழத்துக்கு உரிய விலை வழங்கக் கோரி, விவசாயிகள் மாங்கொத்துடன் நூதன முறையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து சேலம் கூட்டாத்துப்பட்டி நீா்மூழ்கிகுட்டை பகுதியைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

லஞ்சப் புகாா்: கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் கைது

நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், காமக்காபாளையத்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ஆதிதிராவிடா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் தலைமறைவு: மூவா் கைது

வாழப்பாடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் தலைமறைவானதால், அவரது தந்தை, நண்பா் மற்றும் உறவினா் ஆகிய மூவரை வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வாழப்பாடியை அடுத்த மணக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்களின் பாதிப்புகள் குறித்து மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும்

போதைப் பொருள்களின் பாதிப்புகள் குறித்து மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சா்வதேச சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.சி.சதீஷ்குமாரிடம் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் கோரிக்கை ம... மேலும் பார்க்க