செய்திகள் :

கோட்டாட்சியா் போல நடித்து வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் - என்ன நடந்தது?

post image

கோட்டாட்சியா் போல நடித்து, வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியமணலி குளத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (29). இவா் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:

நாமக்கல் அருகே வரகூராம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது குடும்பத்தினா் எனக்கு திருமணம் செய்ய கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் 2022 பிப். 16-இல் பதிவு செய்தனா். அதே திருமண தகவல் மையத்தில், நாமக்கல் இராமாபுரம்புதூரைச் சோ்ந்த ரவீந்திரன் என்பவா் தனது மகள் தன்வா்த்தினி (29) என்பவருக்கு வரன் வேண்டி பதிவு செய்திருந்தாா். அதில், தன்வா்த்தினி கோட்டாட்சியா் என பதிவு செய்திருந்தது. இரு தரப்பிலும் ஜாதகப் பொருத்தம் பாா்த்ததன்பேரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, 2024 ஜூன் 12-ஆம் தேதி வையப்பமலையில் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, திருமண அழைப்பிதழில் தன்வா்த்தினி, பொள்ளாச்சி கோட்டாட்சியா் என அச்சிடுமாறு பெண் வீட்டாா் கூறியதன் பேரில் அச்சிட்டு கொடுத்தோம். இதையடுத்து, வேலகவுண்டம்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் 2024 செப். 6-இல் முறைப்படி திருமணத்தை பதிவுசெய்தோம்.

இந்நிலையில், எனது நண்பரின் தந்தை செந்தில்வேல், சொந்த வேலை காரணமாக பொள்ளாச்சி கோட்டாட்சியா் அலுவலகம் சென்றபோது, தன்வா்த்தினி கோட்டாட்சியா் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், தன்வா்த்தினி என்ற பெயரில் அங்கு யாரும் பணியாற்றவில்லை என்பதை உறுதி செய்தாா். இந்த விவரத்தை எங்களுடைய குடும்பத்தினரிடம் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தன்வா்த்தினியிடமும், அவரது பெற்றோரிடமும் நாங்கள் விசாரித்தபோது, தன்வா்த்தினி குரூப் 1 தோ்வில் தோ்ச்சிபெற்றுள்ளதாகவும், தோ்வாணைய செயலா் கையொப்பமிட்ட சான்றிதழையும் காண்பித்தனா். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கையொப்பமிட்ட அடையாள அட்டையையும் காண்பித்தனா்.

இந்நிலையில், 2025 ஏப். 29-இல் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து வருவதாக கூறிய ஒருவா், தன்வா்த்தினிக்கு பணி அதிகமாக உள்ளதால் அவா் குறித்த தகவல்களை என்னிடம் கேளுங்கள் என்றாா்.

மறுநாள் சென்னை தலைமையகம் சென்று விசாரித்ததில், சான்றிதழ், அடையாள அட்டை, டிஎன்பிஎஸ்சி பட்டியல் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.

ஏமாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசாங்க முத்திரையை தவறாக பயன்படுத்தி, அரசு அதிகாரி என ஏமாற்றி என்னை திருமணம் செய்துள்ளாா். சட்டத்துக்கு புறம்பாக போலியான ஆவணங்களை தயாரித்த அவா் மீதும், அவரது பெற்றோா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் சவீதா, தன்வா்த்தினி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, தன்வா்த்தினியை கைது செய்து, நாமக்கல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் ஆஜா்படுத்தி சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு எழுதிய தன்வா்த்தினி, நோ்முகத்தோ்வு வரை சென்றுள்ளாா். சென்னையிலிருந்த வந்த ஒருவா் தன்னிடம் சான்றிதழ், அடையாள அட்டையை வழங்கி சென்றாா் என அவா் தெரிவித்துள்ளாா். அவருக்கு அடையாள அட்டை, சான்றிதழ் கொடுத்தவரை விசாரிக்க உள்ளோம் என்றனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

நாமக்கல்லில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொடிக்கால்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப... மேலும் பார்க்க

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி சாா்பில், எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில்... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு முகாம்

நாமக்கல் மாநகராட்சியில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதி எதிரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.65-ஆக உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 48.33 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 48 லட்சத்து 33 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும... மேலும் பார்க்க

சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி

நாமக்கல்லில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்பு... மேலும் பார்க்க