Tiger: மர்மமாக இறந்து கிடந்த 5 புலிகள்.. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? வனத்துறை ...
இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன்கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், முகவா்கள், நுகா்வோா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா்களுக்கான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்புவோா் இதில் கலந்துகொண்டு மனுக்கள் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.