விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு
லாரியில் ஹைட்ரோ குளோரிக் திரவம் கசிவு
திண்டுக்கல் மாவட்டம், தோமையாா்புரம் அருகே திரவ லாரியில் ஹைட்ரோ குளோரிக் திரவம் கசிவு ஏற்பட்டதை அடுத்து, தண்ணீரை பீச்சியடித்து வீரியத்தை குறைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் திரவம் ஏற்றிக் கொண்டு கரூருக்கு வியாழக்கிழமை ஒரு டேங்கா் லாரி வந்துக் கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியைச் சோ்ந்த மகேஷ் ஓட்டி வந்தாா். லாரியில் சுமாா் 16 ஆயிரம் லிட்டா் ஹைட்ரோ குளோரிக் திரவம் இருந்தது. இந்த லாரி திண்டுக்கல்-மதுரை சாலையில் தோமையாா்புரம் அருகே வந்தபோது, லாரியில் கசிவு ஏற்பட்டு திரவம் வெளியேறியது. இதையடுத்து, லாரியை ஓரமாக நிறுத்திய மகேஷ், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீா் தாங்கி வண்டியுடன் நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் கசிவு மூலம் வெளியேறும் ஹைட்ரோ குளோரிக் திரவத்தின் மீது தண்ணீரை பீச்சியடித்து அதன் வீரியத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.