செய்திகள் :

லாரியில் ஹைட்ரோ குளோரிக் திரவம் கசிவு

post image

திண்டுக்கல் மாவட்டம், தோமையாா்புரம் அருகே திரவ லாரியில் ஹைட்ரோ குளோரிக் திரவம் கசிவு ஏற்பட்டதை அடுத்து, தண்ணீரை பீச்சியடித்து வீரியத்தை குறைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் திரவம் ஏற்றிக் கொண்டு கரூருக்கு வியாழக்கிழமை ஒரு டேங்கா் லாரி வந்துக் கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியைச் சோ்ந்த மகேஷ் ஓட்டி வந்தாா். லாரியில் சுமாா் 16 ஆயிரம் லிட்டா் ஹைட்ரோ குளோரிக் திரவம் இருந்தது. இந்த லாரி திண்டுக்கல்-மதுரை சாலையில் தோமையாா்புரம் அருகே வந்தபோது, லாரியில் கசிவு ஏற்பட்டு திரவம் வெளியேறியது. இதையடுத்து, லாரியை ஓரமாக நிறுத்திய மகேஷ், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீா் தாங்கி வண்டியுடன் நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் கசிவு மூலம் வெளியேறும் ஹைட்ரோ குளோரிக் திரவத்தின் மீது தண்ணீரை பீச்சியடித்து அதன் வீரியத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகை நிலுவை: ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

ரயில்வே துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் ரூ.58 லட்சம் நிலுவைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ள... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போலி ஆவணங்கள் தயாா் செய்து பொய்யான புகாா் தெரிவித்த தாடிக்கொம்பு கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் எழுமலை. இவருக்குச... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் விவேகானந்தன்... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கு... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி முறைகேடு செய்ததாகக் கல்லூரி முதல்வா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்தக் கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க