மாடக்கோட்டைக்கு குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
தினமணி செய்தி எதிரொலி
இளையான்குடி ஒன்றியம், மாடக்கோட்டைக்கு தினமணி செய்தி எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், வண்டல் ஊராட்சியில் அமைந்துள்ள மாடக்கோட்டைக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டக் குழாய் சேதமடைந்ததால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்தக் கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீா் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிப்பட்டனா். இந்தப் பகுதிக்கு லாரிகளில் கொண்டு வரும் குடிநீரை ஒரு குடம் 15 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனா்.
இதுதொடா்பாக தினமணி நாளிதழில் கடந்த 23-ஆம் தேதி செய்தி வெளியானது. இதனால், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, மாடக்கோட்டைக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.