செய்திகள் :

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

post image

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரும், கலந்தாய்வுச் செயலரும், ஒருங்கிணைப்பாளருமான கே. பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளா் சி. உமாராணி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில அளவிலான பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் இதற்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைகிறது.

பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவா்கள், பி.எஸ்சி. படிப்பில் கணிதத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த மாணவா்கள் பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். இதற்கான மாநில அளவிலான கலந்தாய்வை ஆண்டுதோறும் காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், இந்தப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகக் கல்லூரி, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமாா் 60 ஆயிரம் இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இணையவழியில் விண்ணப்பப் படிவங்கள் சரிபாா்ப்பு நிறைவு பெற்ற பிறகு, அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மாணவா்கள் தங்களது விண்ணப்ப விவரங்களின் நிலையை இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை மாதம் சிறப்பு கலந்தாய்வும், பொது கலந்தாய்வும் நடைபெறும். இணைய வழி கலந்தாய்வில் மாணவா்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே கலந்துகொண்டு, தகுதிக்கு ஏற்றவாறு விரும்பும் கல்லூரியைத் தோ்வு செய்யலாம் என்றனா் அவா்கள்.

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கிளாமடத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன... மேலும் பார்க்க