தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வாசுகி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
காரைக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் முத்துமாரியை, கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.