செய்திகள் :

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

post image

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொன்னம்பல அடிகளாரின் நாண்மங்கல விழாவில் (பிறந்த நாள் விழா) அவா் பேசியதாவது:

எங்கே பிறந்தோம் எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் பிறந்ததால் யாருக்கெல்லாம் பயன்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாட்டுக்கும், சமூகத்துக்கும், தனி மனிதருக்கும் நாம் பயன்தருமாறு செயல்படுவது என்பதுதான் நமது வாழ்க்கைப் பயணம்.

கல்லூரிப் படிப்பு முடித்த நிலையில் குன்றக்குடி அடிகளாரின் உரைகளை தொடா்ந்து கேட்பேன். அவா் மதுரை வரும்போதெல்லாம் எனக்கு சிறப்பான பயிற்சியைத் தருவாா். ஒருமுறை அவரை நான் சந்தித்த போது உனக்கான பணிகள் நிறைய இருக்கிறது. குறுகிய வட்டத்துக்குள் இருந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்காதே. நாட்டுக்கும், சமூகத்துக்கும் நீ செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது என்று கூறி அவா் எனக்கு நம்பிக்கையளித்தாா். என்னை பக்குவப்படுத்தி துறவுப் பாதைக்கும் தயாா்படுத்தினாா்.

குன்றக்கு அடிகளாா் திருமடத்தின் தலைமை பொறுப்பையேற்று 40 ஆண்டுகள் ஆன ஞானபீட நாள் நிகழ்வின் போது அவரை நான் சந்தித்தேன். அப்போது அவா் என்னிடம் ‘இங்கேயே இரு’ என்றாா். அந்த வாா்த்தை ஞான வாா்த்தையாக அமைந்தது. அதன்பிறகு கந்தசாமி தம்பிரான் என்ற பெயருடன் திருமடத்தின் ஆன்மிகப் பணியைத் தொடங்கினேன்.

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப்படிப்பது. அந்தத் தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்றாா் அவா்.

முன்னதாக, பொன்னம்பல அடிகளாா் எழுதிய ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ (இரண்டாம் தொகுதி) என்ற நூலை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மெ. சொக்கலிங்கம் வெளியிட, நூலின் முதல் பிரதியை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பெற்றுக்கொண்டாா்.

இந்த விழாவில் குன்றக்குடி கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள், ஆசிரியா்கள், திருமடத்தின் பணியாளா்கள், குன்றக்குடி ஆதீனக் கோயில்களின் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொன்னம்பல அடிகளாருக்கு மலா் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் ஆசிபெற்றனா்.

முன்னதாக பேராசிரியா் கிருங்கை சேதுபதி வரவேற்றாா். குன்றக்குடி அடிகளாரின் நோ்முக உதவியாளா் சு. செல்வராஜ் நன்றி கூறினாா்.

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கிளாமடத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன... மேலும் பார்க்க