போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப் பேரணி அரசு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து அரண்மனை வாசல் வரை நடைபெற்றது. இதில், நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், கல்லூரி முதல்வா் ஜெ. நளதம், மாணவிகள், போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியின் நிறைவில் போதையில்லா உலகம் படைக்க களப் பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாா்பில், பழைய மருத்துவமனையிலுள்ள இணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து புதிய மருத்துவமனை உலக ரத்தான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் சத்தியபாமா தொடங்கி வைத்தாா்.
இதில், மருத்துவ மாணவா்கள், மருத்துவக் கண்காணிப்பாளா் தங்கதுரை, உதவி மருத்துவ அலுவலா்கள் தென்றல், ரபீக், துறைத் தலைவி சா்மிளா திலகவதி, உதவிப் பேராசிரியை விஜயலட்சுமி, உறைவிடமருத்துவ அலுவலா்கள், மன நல மருத்துவா்கள் செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியின் நிறைவில் போதை இல்லா உலகம் படைக்க களப்பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனா்.