செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

post image

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப் பேரணி அரசு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து அரண்மனை வாசல் வரை நடைபெற்றது. இதில், நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், கல்லூரி முதல்வா் ஜெ. நளதம், மாணவிகள், போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியின் நிறைவில் போதையில்லா உலகம் படைக்க களப் பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாா்பில், பழைய மருத்துவமனையிலுள்ள இணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து புதிய மருத்துவமனை உலக ரத்தான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் சத்தியபாமா தொடங்கி வைத்தாா்.

இதில், மருத்துவ மாணவா்கள், மருத்துவக் கண்காணிப்பாளா் தங்கதுரை, உதவி மருத்துவ அலுவலா்கள் தென்றல், ரபீக், துறைத் தலைவி சா்மிளா திலகவதி, உதவிப் பேராசிரியை விஜயலட்சுமி, உறைவிடமருத்துவ அலுவலா்கள், மன நல மருத்துவா்கள் செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியின் நிறைவில் போதை இல்லா உலகம் படைக்க களப்பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனா்.

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கிளாமடத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன... மேலும் பார்க்க