தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
சொத்து வரி முறைகேடு: மாநகராட்சி ஊழியா்கள் 5 போ் கைது
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டில் முறைகேடு செய்ததாக மாநகராட்சி ஊழியா்கள் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுரை மாநகராட்சி ஊழியா்கள் சிலா், சொத்து வரியை குறைத்து மதிப்பீடு செய்து, மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக மாநகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் தனசேகரன் (35), சதீஷ் (31), உதவி ஆணையரின் உதவியாளா் காா்த்திகேயன் ஆகியோரிடம் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா். பிறகு, தனசேகரன், சதீஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், காா்த்திகேயன் (38), மாநகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் ஜாகிா் உசேன் (34), ராஜேஷ் (37) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.