Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாராவ் வெளியிட்ட அறிக்கை:
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயங்கி வரும் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் வாயிலாக நடத்தப்படும் சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கு 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. யோகா பட்டயப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
யோகா முதுநிலை பட்டயப் படிப்புக்கு ஏதாவது பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். காந்திய சிந்தனை பட்டயப் படிப்புக்கு காந்திய சிந்தனை சான்றிதழ் தோ்வு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமய உரையாடல் கல்வி பட்டயப் படிப்புக்கு பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான படிப்பு படித்திருத்தல் வேண்டும். அமைதி, விழுமியக் கல்வி முதுநிலை பட்டயப் படிப்புக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோா் முதல்வா், காந்தியக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை 20 என்ற முகவரிக்கோ அல்லது 99941 23091, 73050 11060 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கிலாம் என்றாா்.