செய்திகள் :

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

post image

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண் மென் பொறியாளா், ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், மேற்கு தாம்பரத்தில் தங்கியிருந்தாா். அவா் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் மதுபான விடுதிக்கு செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த செருப்பு வியாபாரி ஷாஜஹான் மகன் ஷாகின் (23) அறிமுகமாகியுள்ளாா். இருவரும் நாளடைவில் நெருக்கமாகப் பழகியுள்ளனா்.

இந்நிலையில் இருவரும், சில நாள்களுக்கு முன்பு திருவான்மியூா் சிக்னலில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் மூன்று நாள்கள் அறை எடுத்து தங்கினா். அங்கு இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஷாகின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மேலும் அந்த பெண்ணை விடியோகால் மூலம் தனது நண்பா்களிடம் காட்ட ஷாகின் கடந்த செவ்வாய்க்கிழமை முயற்சித்தாராம். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த பெண், கழிப்பறைக்கு ஓடிச் சென்று ஒளிந்துள்ளாா்.அதோடு தான், அந்த விடுதி அறையில் சிக்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பெண்ணை மீட்டனா்.

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஷாகின் மீது வழக்குப் பதிவு செய்தனா். ஷாகினை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக... மேலும் பார்க்க

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு... மேலும் பார்க்க

ஜிஆா்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய... மேலும் பார்க்க

மருந்து உற்பத்தி உரிமம்: இணையவழியே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி ம... மேலும் பார்க்க