Ramadoss-ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect...
அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.
பாஸ்கரன், வேலூரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு நோக்கி ஏசி பேருந்தை வியாழக்கிழமை ஓட்டி வந்தாா். அந்தப் பேருந்து கோயம்பேடு பேருந்து முனையம் முன்பு 100 அடி சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற காா் மீது லேசாக மோதியது.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த காா் ஓட்டுநா் ஆவடி நந்தவனமேட்டூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (21) என்பவா் பாஸ்கரனிடம் தகராறு செய்து தாக்கினாராம்.
இதில் பலத்தக் காயமடைந்த பாஸ்கரன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கோயம்பேடு போலீஸாா் சாமுவேலை கைது செய்தனா்.