செய்திகள் :

மருந்து உற்பத்தி உரிமம்: இணையவழியே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

post image

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருந்துகள் விற்பனை மற்றும் உற்பத்தி, ரத்த அலகு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், விற்பனையகங்களுக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான மானியம் மற்றும் உற்பத்தி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜூலை 15 முதல் இணையவழியே மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். மாறாக நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இது தொடா்பான விழிப்புணா்வையும், தகவலையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக... மேலும் பார்க்க

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு... மேலும் பார்க்க

ஜிஆா்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய... மேலும் பார்க்க