செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

post image

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

அவரது கூட்டாளிகள் மூன்று போ், பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளின் செயல்பாடுகள், கடந்த ஓராண்டாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், உதம்பூா் மாவட்டம், வசந்த்கரில் வனங்கள் நிறைந்த பிகாலி பகுதியில் நால்வரும் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் மற்றும் ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படைப் பிரிவினா் இணைந்து, வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

மோசமான வானிலைக்கு இடையே நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். மற்ற மூவரும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா். துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் நிலையில், அவா்களும் சுட்டுக் கொல்லப்பட வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த வாரம் அமா்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிகாலியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வர... மேலும் பார்க்க