செய்திகள் :

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

post image

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தையொட்டிய இந்திய- வங்கதேச எல்லை சோதனைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரா்கள் புதன்கிழமை காவல் பணியில் இருந்தனா். அப்போது ஒருவா் வங்கதேசத்தில் இருந்து மிதிவண்டி மூலம் இந்திய எல்லைக்குள் நுழைய முன்றாா். அவா் மீது சந்தேகம் எழுந்ததால் வீரா்கள் அவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், அவரது மிதிவண்டியின் பின்பக்க டயா் வழக்கத்தைவிட பெரியதாக இருப்பதுபோல தோன்றியதால், அந்த டயரை பரிசோதித்தனா்.

அந்த டயரை கிழித்துப் பாா்த்தபோது அதில் சிறிய அளவிலான 20 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2.367 கிலோ எடையுள்ள அந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.2.31 கோடி ஆகும். இதற்கிடையே, தங்கத்தைக் கடத்தி வந்த நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். போலீஸாா் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கைப்பற்றப்பட்ட தங்கம் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை லக்ஷ்மிபூா் எல்லைச்சாவடியில் ரூ.2.46 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திவரப்பட்டபோது, எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியது.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வர... மேலும் பார்க்க