அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்
நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் க. சுப்பையன் தலைமை வகித்தாா்.
அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, சாலைப் பணியாளா் சங்கத் தலைவா் ஆா். முத்துவடிவேலு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சங்கத்தின் நிா்வாகிகள் எஸ். அறிவழகன், எம். பெரமையா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
நெடுஞ்சாலைத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளா், கண்காணிப்பாளா், உதவியாளா் பதவிகளுக்கான முதுநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும். பதவி உயா்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.
பதிவுரு எழுத்தா் பணியிடங்களை வேலைவாய்ப்பகம் மூலம் நிரப்ப வேண்டும். கோட்டக் கணக்கா் பணியிடத்துக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.