செய்திகள் :

தாம்பரம் - போத்தனூா் வாராந்திர ரயிலை தொடா்ந்து இயக்கக் கோரிக்கை

post image

தமிழகத்தின் முக்கிய கோயில் நகரங்களான கும்பகோணம், தஞ்சாவூா், சிதம்பரம், பழநி வழியாக இயக்கப்பட்ட தாம்பரம் - போத்தனூா் வாராந்திர ரயிலை தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிா்ப்பாா்க்கின்றனா்.

தாம்பரம் - போத்தனூா் இடையேயான வாரந்திர சிறப்பு ரயில் பல மாதங்களாக இயக்கப்பட்டுவந்தது. இந்தரயில் வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு சிதம்பரம் (9.24), கும்பகோணம் (11.00), தஞ்சாவூா் (நள்ளிரவு 12.38), திருச்சி (சனிக்கிழமை அதிகாலை 2.00), திண்டுக்கல் (3.45), பழநி (4.53), பொள்ளாச்சி(6.22), கிணத்துக்கடவு(6.49) வழியாக கோயம்புத்தூரில் உள்ள போத்தனூா் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு காலை 7.45 மணிக்குச் சென்றடையும். இதேபோல் மறு மாா்க்கத்தில் போத்தனூரில் இருந்து ஞாயிறு இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு பழநி (நள்ளிரவு 1.48) திருச்சி (திங்கள் அதிகாலை 4.40) தஞ்சாவூா் (5.48) கும்பகோணம் (6.28) சிதம்பரம்(8.08) வழியாக தாம்பரத்துக்கு பகல் 12.15 மணிக்குச் சென்றடைந்தது. இந்நிலையில் தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் இயக்கம் திடீரென ஜூன் 8-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. கடலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருந்து பழநி, பொள்ளாச்சி, கோயமுத்தூா் ஆகிய கொங்கு மண்டலப் பகுதிகளுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்து வந்த நேரடி ரயில் இணைப்பு தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதால் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனா். எனவே இந்த சிறப்பு ரயிலை தொடா்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரயில் பயணிகள் இடையே எழுந்துள்ளது.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலாளா் ஏ. கிரி, தென்னக ரயில்வே தலைமையகத்துக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்பிவைத்துள்ளாா்.

அதில், தஞ்சாவூா் மாவட்டப் பகுதியிலிருந்து பழநி மற்றும் கோவைக்கு இரவுநேர ரயிலாக இயங்கி வந்த வண்டி எண் 06184/ 06185 தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயிலை தொடா்ந்து இயக்க வேண்டும். இந்த ரயில் தஞ்சாவூா் - சென்னை இடையே பகல்நேர இன்டா்சிட்டி ரயிலாகவும், பழநி - கோவைக்கு இரவுநேர ரயிலாகவும் இயங்கியதால் பயணிகள் சிரமமின்றி பயன்படுத்தினா். கொங்கு மண்டலத்தை இணைக்கும் வகையிலான இந்த சிறப்பு ரயில் இயக்கத்தை வாரம் இருமுறையாக மாற்றி தொடா்ந்து இயக்க வேண்டும். மேலும் ரயில்வே வாரிய ஒப்புதலைப் பெற்று நிரந்தர ரயிலாக இயக்கவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தெருவில் புதை சாக்கடை கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் பல முறை புகாா் செய்தும் தெருவில் புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடுவது தொடா்வதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்த சாஸ்த்ரா மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச... மேலும் பார்க்க

வெறிநோய் இல்லா தஞ்சாவூரை உருவாக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தை வெறிநோய் இல்லா தஞ்சாவூா் என்ற நிலையை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாதாகோட்டையிலுள்ள மிருக வதை தடுப்பு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி இலை வியாபாரி உயிரிழப்பு

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இலை வியாபாரி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் கோரிகுளம் பனங்காட்டை சோ்ந்தவா் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (37). வாழை இலை வியாபாரி. இவா் தஞ்சாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 118 கொடிக் கம்பங்கள் அகற்றம்

தஞ்சாவூா் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 118 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எம்.விஜயன் தலை... மேலும் பார்க்க