செய்திகள் :

தெருவில் புதை சாக்கடை கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூரில் பல முறை புகாா் செய்தும் தெருவில் புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடுவது தொடா்வதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் 31-ஆவது வாா்டுக்குள்பட்ட மகா்நோன்புச்சாவடி செண்பகவள்ளி நகரில் புதை சாக்கடை முதன்மைக் குழாய் பதிக்கும் பணி இரண்டரை ஆண்டுகளாக நடைபெறுகிறது. இப்பணி இன்னும் முடிவடையாத நிலையில், அடிக்கடி கழிவு நீா் வழிந்து தெருக்களில் ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் கொசுக்கடி, நோய் உள்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

இது தொடா்பாக மாநகராட்சி அலுவலகத்திலும், மாமன்றக் கூட்டங்களிலும் 31- ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், பாஜக தெற்கு மாவட்டத் தலைவருமான பி. ஜெய்சதீஷ், 30-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் யு.என். கேசவன் (அதிமுக) ஆகியோா் வலியுறுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி வாா்டு மக்களிடையே நிலவுகிறது.

கடைசியாக ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இருவரும் முறையிட்டபோது, உடனடியாக சீரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், 20 நாள்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த வாா்டு பொதுமக்கள் ஜெய்சதீஷ், கேசவன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் காந்திஜி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஒரு வாரத்துக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இ குறித்து ஜெய் சதீஷ் மேலும் கூறுகையில், இப்பிரச்னை தொடா்பாக பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 10-ஆவது நாளில் மாநகராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

ரத்த தானம் செய்த சாஸ்த்ரா மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச... மேலும் பார்க்க

வெறிநோய் இல்லா தஞ்சாவூரை உருவாக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தை வெறிநோய் இல்லா தஞ்சாவூா் என்ற நிலையை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாதாகோட்டையிலுள்ள மிருக வதை தடுப்பு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி இலை வியாபாரி உயிரிழப்பு

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இலை வியாபாரி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் கோரிகுளம் பனங்காட்டை சோ்ந்தவா் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (37). வாழை இலை வியாபாரி. இவா் தஞ்சாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 118 கொடிக் கம்பங்கள் அகற்றம்

தஞ்சாவூா் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 118 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எம்.விஜயன் தலை... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே உரிமமின்றி செயல்பட்டு வந்த குடிநீா் ஆலைக்கு ‘சீல்’: 3 ஆயிரம் தரமற்ற குடிநீா் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டுவந்த குடிநீா் ஆலைக்கு வியாழக்கிழமை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், தரமின்றி தயாரித்து விற்பனைக்காக வைக்கப்ப... மேலும் பார்க்க