Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
ரத்த தானம் செய்த சாஸ்த்ரா மாணவா்களுக்கு பாராட்டு
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய செஞ்சுருள் சங்க மாணவா்கள், கும்பகோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு நிகழாண்டு 2 முறை தானாக முன் வந்து ரத்த தானம் செய்தனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான தின விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்களில் 6 சிறந்த மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி பாராட்டினாா்.