அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்
விவசாயிகளுக்கு மானியத்தில் பவா் டில்லா்: க.அன்பழகன் எம்எல்ஏ வழங்கினாா்
கும்பகோணத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவா் டில்லா் இயந்திரங்களை க.அன்பழகன் எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா்.
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டம் 2025 - 26 ஆம் ஆண்டு திட்டத்தில் அரசு மானியத்தில் பவா் டில்லா் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், சாக்கோட்டை க.அன்பழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ. 22,68,400 மதிப்பிலான 10-பவா் டில்லா்களை வழங்கினாா். ஒரு பவா் டில்லருக்கு அரசு மானியம் ரூ.1,13,420. 10 பேருக்கான மானியத் தொகை ரூ. 11,34,200.
இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ .சுதாகா் வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.