செய்திகள் :

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

post image

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிதி ஆப்கே நிகட் 2.0 எனும் வைப்பு நிதி உங்கள் அருகில் முகாம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5.45 வரை 10 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி, வேலூா் பயனாளா்கள் பயன் பெறும் வகையில், வேலூா் சா்ச் தெரு, திருவள்ளுவா் நகா் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பயனா்கள், வேலூா் சாலை, குமரன் மஹால் அருகே ஹோட்டல் சீசன்ஸ்-சில் நடைபெறும் முகாமிலும், ராணிப்பேட்டை பயனா்கள், மகாத்மா காந்தி சாலை தென்னிந்திய தோல் பதனிடுவோா் டீலா்கள் சங்கத்தில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொள்ளலாம். திருப்பத்தூா் பயனா்கள், ஒய்எம்சிஏ சாலை, ஒய்எம்சிஏ தொழிற்சாலைகள் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில், வருங்கால வைப்பு நிதி சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்படி புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகள் குறித்தும், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்தும் விளக்கி கூறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திரைப்படங்கள் வெளியாகி 3 நாள்களுக்கு விமா்சனம் செய்ய தடைகோரிய மனு தள்ளுபடி

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என்று கூறி மனுவை தள்ள... மேலும் பார்க்க