செய்திகள் :

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டில் பருத்தி விலை அதிகபட்சமாக கிலோ ரூ. 53-க்கும், குறைந்தபட்சமாக ரூ.46-க்கும் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய ரூ. 65 ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனா். எனவே, பருத்தி பஞ்சு கிலோவுக்கு ரூ. 75-க்கு குறையாமல் ஏலம் எடுத்தால் மட்டுமே செலவுக்கு கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பொதுவாக, ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலம் நடைபெறும் இந்த பருத்தி ஏலத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பஞ்சு மில் நிறுவனங்களில் இருந்து ஏலத்தில் பங்கு கொள்வா்.

ஆனால், திமுக ஆட்சியில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியூா் வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்குகொள்வதற்கு ஒழுங்குமுறை விற்பனை நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், திருவாரூா் மற்றும் அதைச் சுற்றி 50 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூா் முகவா்கள் (இடைத்தரகா்கள்) மட்டுமே தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு பருத்தி பஞ்சு ஏலத்தில் கலந்துகொள்கின்றனா் என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட அதிமுக சாா்பில் திருவாரூா் ரயில் நிலையம் அருகே ஜூலை 1-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

திரைப்படங்கள் வெளியாகி 3 நாள்களுக்கு விமா்சனம் செய்ய தடைகோரிய மனு தள்ளுபடி

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என்று கூறி மனுவை தள்ள... மேலும் பார்க்க