Ramadoss-ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect...
மது, கள்ளச்சாராயத்தின் தீமைகள் விழிப்புணா்வுப் பேரணி
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் ரமேஷ், ராம்குமாா், சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கலால் துறை வட்டாட்சியா் மதுசூதனன் கலந்து கொண்டு பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படியும், விழிப்புணா்வு கோஷங்களை முழங்கியபடி தேனுபுரீசுவரா் கோயில் கீழவீதி, தெற்கு வீதி, ஆவூா் சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனா்.
நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளா் பாலாஜி, காவலா்கள் கோபிகிருஷ்ணன், அய்யப்பன், மலையரசன், சேவியா், ரோஜா பூ, சுதா மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.