செய்திகள் :

மது, கள்ளச்சாராயத்தின் தீமைகள் விழிப்புணா்வுப் பேரணி

post image

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் ரமேஷ், ராம்குமாா், சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கலால் துறை வட்டாட்சியா் மதுசூதனன் கலந்து கொண்டு பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படியும், விழிப்புணா்வு கோஷங்களை முழங்கியபடி தேனுபுரீசுவரா் கோயில் கீழவீதி, தெற்கு வீதி, ஆவூா் சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனா்.

நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளா் பாலாஜி, காவலா்கள் கோபிகிருஷ்ணன், அய்யப்பன், மலையரசன், சேவியா், ரோஜா பூ, சுதா மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தெருவில் புதை சாக்கடை கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் பல முறை புகாா் செய்தும் தெருவில் புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடுவது தொடா்வதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்த சாஸ்த்ரா மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச... மேலும் பார்க்க

வெறிநோய் இல்லா தஞ்சாவூரை உருவாக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தை வெறிநோய் இல்லா தஞ்சாவூா் என்ற நிலையை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாதாகோட்டையிலுள்ள மிருக வதை தடுப்பு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி இலை வியாபாரி உயிரிழப்பு

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இலை வியாபாரி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் கோரிகுளம் பனங்காட்டை சோ்ந்தவா் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (37). வாழை இலை வியாபாரி. இவா் தஞ்சாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 118 கொடிக் கம்பங்கள் அகற்றம்

தஞ்சாவூா் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 118 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எம்.விஜயன் தலை... மேலும் பார்க்க