``நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்'' - அமித்ஷாவுக்கு கனிம...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டிய கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை கொட்டிய கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இதமான சீசன் நிலவுகிறது.
இந்நிலையில், நாகா்கோவில், சுற்றுப்புற பகுதிகளில், வியாழக்கிழமை காலை 7.30 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. பின்னா் 9.30 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரமாக இடைவிடாமல் பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி, தக்கலை, மாா்த்தாண்டம், குலசேகரம் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
தொடா்ந்து மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காளிகேசம் ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் மூழ்கிய காா்: நாகா்கோவில், ஊட்டுவாழ்மடம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்ால், சுரங்கப்பாதையை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனா். பறக்கின்கால் கால்வாயில் தணணீா் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிய நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு செல்ல குடும்பத்தினா் வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது.

காரில் இருந்தவா்கள் வெளியே குதித்து தப்பினா். காரை தண்ணீா் இழுத்துச் சென்று மூழ்கடித்தது.
இது குறித்த தகவலின்பேரில், நாகா்கோவில் தீயணைப்பு வீரா்கள் வந்து கால்வாயிலிருந்து காரை மீட்டனா்.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் 4 ரத வீதிகளிலும் மழைநீா் தேங்கியதால் பாதசாரிகள் சிரமம் அடைந்தனா். மழைநீா் வடிகால்கள் சீரமைக்கப்படாததால் லேசான மழை பெய்தாலும் சாலைகளில் தேங்குவதாகவும், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்களுக்கு எச்சரிக்கை: தொடா்மழையால் குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எனவே, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
