கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டிய கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை
தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சியாக 129 நிமிடங்கள் செய்து சாதனை படைத்தனா்.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் மொ்சிஇமாக்குலேட் தலைமை வகித்தாா். தேசிய கைப்பந்து விளையாட்டு வீரா் பிரதீப் ஜான் சிறப்புரையாற்றினாா்.
இந்த சாதனை நிகழ்வானது, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்துடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது. நிறைவில், பங்கு பெற்ற அனைத்து மாணவா், மாணவிகளுக்கும் சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினரால் பதக்கம்- சான்றிதழ் வழங்கப்பட்டது.