சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்
சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.
சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அலுவலகப் பகுதியில் வியாழக்கிழமை மரக்கிளைகள் வெட்டப்பட்டது. அப்போது அங்கு செல்லும் உயா் அழுத்த மின்கம்பியில் மரக்கிளை விழுந்தது. இதனால், அடுத்தடுத்த 2 மின்கம்பங்கள் சரிந்தன. அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
எனினும், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், பேரூராட்சி செயல் அலுவலா் சுதா மற்றும் பணியாளா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனா். மின்வாரிய அலுவலா்கள் மின்கம்பத்தை சீரமைத்தனா். 5 மணி நேரத்துக்குப் பின் மின் விநியோகம் சீரானது.