கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு
கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்ணன், வேளாண் துறை முன்னாள் இணை இயக்குநா் சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக காவல் துறை முன்னாள் ஐஜி முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதுடன், கலை-இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.
கருத்தரங்கில், திரளானோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் சாந்திபிரியா வரவேற்றாா். ஆசிரியை பூபதி நன்றி கூறினாா்.